ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் டாக்டர் மகேந்திரன்.. இனி திமுகவின் கோட்டையாகுமா கொங்கு?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
Recommended Video
தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சென்னையில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றியது. வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை திமுக வென்றது.
ஆனால் மேற்கு மாவட்டங்களில் மட்டும் அதிமுகவை விட திமுக குறைந்த இடங்களே பெற்றுள்ளன. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக பலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

பலம்
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுக எப்படியாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் நினைத்து வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

பழம் நழுவி பாலில்
இந்த நிலையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளார். இவர் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிக வாக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மகேந்திரன்.

10 வேட்பாளர்கள்
இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். இதன் மூலம் இரு மாத கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், டிஆர் பாலு, கே என் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மகேந்திரன் மகிழ்ச்சி
எனவே மகேந்திரன் மகிழ்ச்சி அடையும் வகையில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும். இவரது செல்வாக்கை வைத்து அடுத்த தேர்தலில் கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாக திமுக மாற்றிக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications