எத்தனை மகேந்திரன்கள் போனாலும் கட்சி காலியாகாது.. நிரூபித்த மநீம.. பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம்
சென்னை: எத்தனை மகேந்திரன்கள் போனாலும் கட்சி காலியாகாது என்பதை பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து தங்களின் பலத்தை நிரூபித்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஏணிப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மத்திய, மாநில அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகர்களில் இன்று நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம்
அதன்படி, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை 2011 ல் இருந்து 2021 வரை உள்ள விலைப்பட்டியலை ஏணி வடிவில் பதாகைகள் மூலம் வடிவமைத்திருந்தனர்.

விலை உயர்வு
சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி செங்கலில் அடுப்பு போல் வடிவமைத்து விறகு வைத்து தீ மூட்டாமல் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசே, மோடி அரசே, விற்காதே, விற்காதே, பொதுத்துறையை தனியாருக்கு விற்காதே என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் நீதி மய்யம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதை பார்க்கும் போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து எத்தனை மகேந்திரன்கள் வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைந்தாலும் எங்கள் கூடாரம் காலியாகவில்லை என்பதை கட்சியிலிருந்து வெளியேறி மாற்றுக் கட்சிகளில் இணைந்தவர்களுக்கு நிரூபித்துவிட்டது மக்கள் நீதி மய்யம்.

மநீம
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா துரோகம் என்பதை தலைவர் அன்றே குறிப்பிட்டிருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் அடையாளம் பெற்று வியாபாரப் பொருளாக்கி கட்சியில் இணைந்துள்ளனர் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications