‛முதுகெலும்பில்லாத’.. ஒடிசா ரயில் விபத்தால் மோடி மீது சுளீர் ‛அட்டாக்’.. சு.சாமிக்கு வந்ததே கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 300யை நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் அந்த ரயில் தடம் புரண்டது. மேலும் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

Modi famous for recruiting incompetent or competent but inappropriate spineless chelas as Minister, Subrmanian Swamy attacks

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 290யை தாண்டி 300யை நெருங்குகிறது. ரயில் விபத்துக்கான சரியான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தண்டவாளத்தில் வேகமாக செல்லும் ரயில் தற்போது விபத்து நடந்த தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் அந்த தண்டவாளம் மெதுவாக செல்லும் ரயிலுக்கான. இதனால் பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

திறமையற்ற அல்லது திறமையான அதேநேரத்தில் பொருத்தமற்ற முதுகெலும்பில்லாத சேலாக்களை(சமஸ்கிருதத்தில் குருவை பாலோ செய்யும் நபர்) அமைச்சர்களாக நியமிப்பதில் மோடி உலக புகழ்பெற்றவர். இதற்கு தற்போது விலை கொடுத்து வருகிறார். திறமையற்ற ஆனால் விசுவாசமான சேலாவின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்பதற்கு மணிப்பூர் கலவரம் மற்றொரு உதாரணமாகும்'' என கூறியுள்ளார்.

இதன்மூலம் பிரதமர் மோடி தன்னை தீவிரமாக பின்பற்றும் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய அமைச்சர்கள் பதவி வழங்கி இருப்பதாகவும், மணிப்பூர் வன்முறை என்பது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் திறமையின்மையாலும், தற்போதைய ரயில் விபத்து என்பது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் நிர்வாக திறமையின்மையின் காரணமாக தான் நடந்துள்ளதாக சுப்பிரமணியன்சாமி சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+