எனக்கு ஓகேதான்.. ஆனா.. பார்த்து பேச சொல்லுங்க.. ரஞ்சித் vs மோகன்ஜி.. உச்சமெடுக்கும் மோதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளனர்; மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இயக்குனர் பா. ரஞ்சித் குறிப்பிட்டதற்கு, இயக்குனர் மோகன்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த விவாகரத்திற்கு இயக்குனர் பா. ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம், என்று கூறியுள்ளார்.

armstrong pa ranjith tamil nadu

இதற்கு எதிராக சென்னையில் அவர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது; திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

இந்த படுகொலையை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; காவல்துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது; சென்னையில் எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளனர்; மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது,

armstrong pa ranjith tamil nadu

இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள் இது ஒரு எச்சரிக்கை., என்று பா. ரஞ்சித் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு இயக்குனர் மோகன்ஜி பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற

இதற்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், அண்ணே சென்னை வந்து வன்னியர் பறையர் தான் பூர்விக குடிகள் இரண்டு சமூக மக்களின் ஒற்றுமை குறித்து பேசுங்க இனிமே இரண்டு சமூக மக்களும் ஒன்று சேர்ந்து சென்னையே ஆளட்டும் திராவிட கட்சிகளை எதிர்த்து பேசுங்க நீங்க அந்த சமூக மக்களை அரவணைத்து செல்லுங்கள்

இதற்கு இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ள பதிலில், சகோதரா.. அனைத்து சமூகங்களின் உழைப்பால் உருவானது தான் சென்னை.. தன்னை மட்டும் பெருமையாகவும், அடுத்தவர்களை குறைத்து மதிப்பீட்டு செய்ததால் இந்த பதிவே தவிர அவர்கள் கோரிக்கை மற்றும் அவர்களின் ஆதங்கத்தில் உளமாற நானும் பங்கேற்கிறேன். பார்த்து பேச சொல்லுங்க.., என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+