காஞ்சிபுரம் , செங்கல்பட்டில்.. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள்.. இதுவரை 140 ஃபுல்!
சென்னை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள 140-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் தற்போது நிவர் புயல் காரணமாகவும் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் இந்த இரு மாவட்டங்களிலும் அமைந்துள்ள ஏரிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

செங்கல்பட்டு- காஞ்சிபுரம்
இங்குதான் உள்ளன. இந்த மாவட்டங்களில் சிறிது, பெரிதுமாக மொத்தம் 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.

நல்ல மழை
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக அதிக அளவில் மழையை வாரி வழங்கியதால் தற்போது இதில் சுமார் 140-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 250--க்கும் மேற்பட்ட ஏரிகளில் 75 சதவீதமும், 200-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 50 சதவீதம் அளவுக்கும் நீர் நிரம்பியுள்ளன.

ஏரிகள் நிரம்பின
மற்ற ஏரிகளும் கொஞ்சம், கொஞ்சமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் இந்த தித்திப்பான தகவல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமில்லாது, சென்னைவாசிகளுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சென்னை மக்கள் எப்போதும் குடிநீருக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி ஏரியை நம்பியே உள்ளனர்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை
அதுவும் கைவிரித்தால் கடலூர் வீராணம் ஏரி, கல்குவாரிகளில் உள்ள தண்ணீரைத்தான் அவர்கள் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி நம்பிக்கையை கொடுத்து வருவதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை இங்கு இருந்து பூர்த்தி செய்து கொள்ள முடியும். தற்போது நிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்து இருந்தாலும், மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளது அப்பகுதி விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications