இந்திய பெருங்கடலில் கரை ஒதுங்கிய உடல்கள்.. அமெரிக்காவின் தாண்டவம்! ஈரக்குலை நடுங்கும் காட்சிகள்
சென்னை: சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டம் இப்போது இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் தன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் 'சைலன்ட் கில்லர்' என்று அழைக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து சீறிப்பாய்ந்த ஒரு டார்பிடோ, ஈரானின் பெருமைமிகு போர்க்கப்பலான 'IRIS Dena'-வை அப்படியே இரண்டு துண்டுகளாகப் பிளந்துவிட்டது.

அலறிய கடல்... அதிர்ந்த பென்டகன்!
"சர்வதேசக் கடற்பரப்பில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்; ஆனால், ஒரு நொடியில் எல்லாம் முடிந்துவிட்டது" - வாஷிங்டனில் இதைப் பெருமிதத்தோடு சொல்கிறார் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத். ஆனால், அவர் சொன்ன அந்த 'முடிந்துவிட்டது' என்ற வார்த்தைக்குப் பின்னால், 87 உயிர்களின் மரண ஓலமும், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் கண்ணீரும் கலந்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போர்க்கப்பலை மூழ்கடித்த மிக அரிதான - அதே சமயம் மிகக் கொடூரமான - நிகழ்வு இது.
தற்காலிகப் பிணவறையாக மாறிய மருத்துவமனை!
இலங்கை கடற்படைக்கு அவசரத் தகவல் (Distress Signal) வந்தபோது, அங்கே கப்பல் இருந்த தடையமே இல்லை. வெறும் டீசல் படலமும், உடைந்து சிதறிய உயிர்காப்புப் படகுகளும் மட்டுமே மிதந்தன.
காலி நகரின் அரசு மருத்துவமனை வளாகம் இன்று ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கிருந்து வரும் காட்சிகள் எப்பேர்ப்பட்டவர்களையும் உறைய வைக்கின்றன:
சிதைந்த உடல்கள்: லாரிகளில் வந்து இறங்கும் சடலங்கள் பல அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கின்றன. உப்புக் காற்றில் ஊறியும், வெடிப்பின் வெப்பத்தில் கருகியும் போன அந்த உடல்களைப் பார்க்கவே வீரர்களுக்குக் கண்கள் கலங்குகின்றன.
மரணப் போராட்டங்கள்: மீட்கப்பட்ட 32 பேரில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. "கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது" என உயிர் பிழைத்தவர்களின் கண்கள் இன்னும் அதிர்ச்சியிலேயே உறைந்து போயிருக்கின்றன.
மறைக்கப்படும் காட்சிகள்: பொதுமக்கள் யாரும் பார்க்காதபடி, மருத்துவமனை வராந்தாக்களில் தற்காலிகத் திரைச்சீலைகள் கட்டப்பட்டு, சடலங்கள் இறக்கப்படுகின்றன.
பின்னணியில் ட்ரம்ப்... பதற்றத்தில் ஆசியா!
ஈரான் கடற்படையை உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும் என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப்பின் தற்போதைய ஒற்றை இலக்கு. அதன் ஒரு பகுதியாகவே, நவீன ஏவுகணைகளும் ஹெலிகாப்டர்களும் கொண்ட இந்த 'பிரைஸ் ஷிப்' (Prize Ship) குறிவைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 17 ஈரான் கப்பல்கள் இப்படி மூழ்கடிக்கப்பட்டிருப்பது பிராந்தியப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
சர்வதேச சட்டங்களைச் சுடுகாட்டிற்கு அனுப்பிய அமெரிக்கா?
போர்க்களத்திலும் சில புனிதமான விதிகள் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டங்களின்படி (UNCLOS), நடுக்கடலில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கும், அவர்களுக்குரிய மரியாதையை அளிப்பதற்கும் சம்பந்தப்பட்ட தேசத்திற்கு (ஈரான்) முழு உரிமையும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அல்லது தாக்கிய நாடே உடல்களை மீட்டு கொடுக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்காவோ அந்தச் சர்வதேச மரபுகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ளது. உடல்களை மீட்பதற்கான மனிதாபிமான இடைவெளியைக் கூட வழங்காமல், இலங்கை கடற்படை உடல்களைக் கையாளுவது ஈரான் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு வீரனின் மரணத்திற்குப் பின் அவனது உடல் அவனது தாய்நாட்டிற்குச் சொந்தமானது" என்கிற அடிப்படை அறத்தைக் கூட வல்லரசு மதிக்கத் தவறியிருப்பது, சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பதை விட, ஈரான் கடற்படையை அழிப்பதிலேயே குறியாக இருந்த அமெரிக்காவின் இந்தச் செயல், கடற்படை விதிகளின் மீதான மிகப்பெரிய அத்துமீறலாகவே பார்க்கப்படுகிறது.
யுத்தம் என்பது எப்போதும் ஏசி அறைகளில் அமர்ந்து தலைவர்கள் போடும் கணக்குதான். ஆனால், அந்தக் கணக்கிற்காக நடுக்கடலில் பலியாவது அப்பாவி வீரர்களும் அவர்களின் கனவுகளும்தான். இன்று இலங்கைக் கரையில் ஒதுங்கியிருப்பது ஈரானிய வீரர்களின் சடலங்கள் மட்டுமல்ல... சர்வதேச அமைதியின் சிதறிய மிச்சங்களும்தான்!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications