தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக தடுப்பூசிகள்
சென்னை :தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவர தகவலில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் நிரந்த தீர்வு என்று நம்பப்படுகிறது. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ள மத்திய அரசு, பல்வேறு மாநிலங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தடுப்பூசியை அனுப்பி வருகிறது.

தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு, தமிழகத்தை காட்டிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
மே 7ஆம் தேதி நிலவரப்படி எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, 7 கோடியே 62லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு, மே 7ஆம் தேதி வரை 72லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை காட்டிலும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட குஜராத்திற்கு, ஒரு கோடியே 39லட்சம் டோஸ்கள் அனுப்பி உள்ளது மத்திய அரசு.
இதே போல் 6 கோடியே 66 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவிற்கு ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதேநேரம் தமிழகத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழகத்தைக் காட்டிலும் இரு மடங்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி உள்ளது மத்திய அரசு
நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 25.03லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை நாடு முழுவதும் 17.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 10ம் தேதி அன்று 10.75 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக்கொண்டுள்ளனர். 14.27 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications