சென்னை பாடி மேம்பாலம் அருகே! பைக் மீது மணல் லாரி மோதல்! தாய், குழந்தை பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தாயும், குழந்தையும் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

padi bridge

சென்னை பாடியை சேர்ந்தவர் சரவணன். இவர் இரு சக்கர வாகனத்தில் மனைவி பிரியாவையும் குழந்தை கரோலினையும் (1) அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாடி மேம்பாலம் அருகே வந்த போது இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சரவணன், பிரியா, கரோலின் ஆகியோர் கீழே விழுந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த சரவணன், கரோலின் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி குழந்தை கரோலின் இறந்துவிட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+