இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாள் வசித்த தாய்.. சென்னை திருநின்றவூரில் அதிர்ச்சி
சென்னை: சென்னை திருநின்றவூரில் இறந்த 7 வயது மகனுடன் அவரது தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் சிடிஎச் சாலையில் சரஸ்வதி என்ற ரேவதி வசித்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது கணவர் ஜீவானந்தமிடமிருந்து பிரிந்து தனது 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.

காவல் நிலையம்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதில் 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சடலம்
தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன்
உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது சரஸ்வதியே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

தாயின் நடவடிக்கை
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 3 தினங்களாக தாயின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் அக்கம்பக்கத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் தாய் வசித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications