Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்யா ஞாபகம் இருக்கா? தாயார் புற்றுநோயால் மரணம்! காலை பிடித்து கதறினாரே.. குடும்பமே சிதைந்து போச்சே!

மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி உயிரிழந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : பரங்கிமலை ரயில் நிலையத்தில், இளைஞனால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சத்யாவின் தந்தை மாணிக்கம், மகள் இறந்த துக்கம் தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தன்னுடன் பேச மறுத்ததால், ஓடும் மின்சார ரயில் முன்பு சத்யாவைத் தள்ளிவிட்டு கொலை செய்தார். மகள் இறந்த சோகம் தாங்க முடியாமல் சத்யாவின் தந்தை மாணிக்கம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்தடுத்து இரண்டு பேரை பறிகொடுத்த குடும்பம் வேதனையில் துடித்தது. இந்நிலையில் சத்யாவின் தாயார் ராமலட்சுமியும் மரணமடைந்துள்ளார்.

பரங்கிமலை அதிர்ச்சி சம்பவம்

பரங்கிமலை அதிர்ச்சி சம்பவம்

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் ராமலட்சுமி. இவரது மூத்த மகள் சத்யா, கடந்த அக்டோபர் மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு ரயிலில் ஏறிச்செல்ல முயன்றபோது, அருகில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் சதீஷ் என்ற இளைஞர், திடீரென சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ், தன்னை சத்யா காதலிக்க மறுத்ததால் 'எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது' என்ற எண்ணத்தில் ரயிலில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஒருதலைக்காதல்

ஒருதலைக்காதல்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், இளைஞன் ஒருதலைக்காதலால், ஓடும் ரயில் முன்பாக மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார், மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷை கைது செய்தனர்.

தந்தை மகள் உடல்கள்

தந்தை மகள் உடல்கள்

தனது மகள் இறந்த துக்கம் தாளாமல், சத்யாவின் தந்தை மாணிக்கம், விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். சத்யாவின் தாய் ராமலட்சுமி தனது மற்ற 2 மகள்களுடன் சேர்ந்து, தனது கணவர் மாணிக்கம் மற்றும் மகள் சத்யா ஆகியோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார். தந்தை, மகள் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமலட்சுமி உயிரிழப்பு

ராமலட்சுமி உயிரிழப்பு

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்யாவின் தாய் ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரங்கிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமலட்சுமி, நீண்ட நாட்களாக தனது மகளின் இழப்பை தாங்க முடியாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமலட்சுமி இன்று உயிரிழந்தார்.

சிதைந்த குடும்பம்

சிதைந்த குடும்பம்

மாணவி சத்யா இல்லத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆறுதல் கூறச் சென்றபோது, ராமலட்சுமி சங்கர் ஜிவாலின் காலை பிடித்துக்கொண்டு கதறி அழுத காட்சி அப்போது அனைவரையும் கலங்கச் செய்தது. இந்நிலையில், கணவர் மற்றும் மகளின் இறப்பால் தவித்து வந்த ராமலட்சுமியும் இன்று மரணமடைந்துள்ளார். இளைஞனின் வெறிக்கு ஒரு குடும்பமே சிதைந்து போயுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+