Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா மட்டுமில்லை.. மகளையும்.. கள்ளக்காதலும், கர்ப்பமும்.. கலங்கிப்போன திருவள்ளூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நடுத்தர வயது பெண்ணின் கள்ளக் காதலும், அதனால் அவரது மகளின் வாழ்க்கையும் எப்படி அழிந்தது என்பதை பார்த்து கலங்கிப்போயுள்ளது திருவள்ளூர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, தேவாந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்ஜன்ராஜ் (50). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.

அதே பேருந்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த விபிஆர் சத்திரத்தை சேர்ந்த குப்புசாமி (45) என்பவர் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார்.

கிளீனர் மனைவியுடன் டிரைவருக்கு கள்ளக் காதல்

கிளீனர் மனைவியுடன் டிரைவருக்கு கள்ளக் காதல்

குப்புசாமிக்கு கோமதி (40) என்ற மனைவி உள்ளார். ஒரே பஸ்ஸில் இரண்டு பேரும் பணியாற்றி வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அதன்பேரில் சரன்ராஜ் அடிக்கடி குப்புசாமி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொது குப்புசாமியின் மனைவி கோமதிக்கும் சர்ஜன்ராஜுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குப்புசாமிக்கு தெரியவரவே சர்ஜன்ராஜுக்கும், குப்புசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஓட்டம் பிடித்த கள்ளக்காதலர்கள்

ஓட்டம் பிடித்த கள்ளக்காதலர்கள்

இதனைத் தொடர்ந்து, இடையூறு இல்லாமல் கள்ளக் காதல் செய்வதற்காக, சர்ஜன்ராஜ், கோமதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். கோமதி தனது மகனை மட்டும் அவரது கணவர் குப்புசாமி வீட்டில் விட்டுவிட்டு 13 வயதுடைய மகளை அழைத்துக் கொண்டு சர்ஜன்ராஜுடன் ஓடிவிட்டார். பிறகு அவர்கள் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கள்ளக்காதலனுடன் ஒரே வீட்டில்

கள்ளக்காதலனுடன் ஒரே வீட்டில்

கோமதி தனது மகளை திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதற்காக 8 ஆம் வகுப்பு சேர்த்திருந்தார். இந்த நிலையில் சர்ஜன்ராஜ் கடந்த வருடம் கொரோனோ ஊரடங்கின் போது கோமதி வீட்டில் இல்லாதபோது அவரது மகளை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். கோமதி வேலைக்கு சென்ற போதெல்லாம் மீண்டும் மீண்டும் கோமதியின் மகளை சர்ஜன்ராஜ் மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

7 மாத கர்ப்பம்

7 மாத கர்ப்பம்

பலாத்கார கொடுமையால் உடலில் வலி ஏற்படத் தொடங்கியுள்ளது சிறுமிக்கு. உடல் வலி, வயிறு வலி பற்றி அவரது தாய் கோமதியிடம் சிறுமி கூறியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார் கோமதி. அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளியான உண்மை

வெளியான உண்மை

இதனால் பதறிப்போனார் கோமதி. நாம்தான் இந்த வயதில் கெட்டுப்போய் அலைகிறோம், மகள் இந்த சின்ன வயசிலேயே எப்படி கெட்டுப்போனார் என்று இடிந்து போயுள்ளார். இதுகுறித்து கோமதி அவரது மகளிடம் துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது சர்ஜன்ராஜ் தான் தன்னை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் மகள்.

குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்தது

இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசில் புகார் கொடுத்தது தெரியவந்ததும் சர்ஜன்ராஜ் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்குப்பதிவு செய்து சர்ஜன்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் அவர் செல்போன் எண் மூலம் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சர்ஜன்ராஜை கைது செய்து திருவள்ளூர் கொண்டுவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போஸ்கோ சட்டத்தின்கீழ் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தை காப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+