திமுகவிடம் கேட்டது கிடைத்ததா! வந்து விழுந்த கேள்வி! சற்று ஜெர்க் ஆன கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன்
சென்னை: திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறதா என்பது குறித்து திருப்பூர் எம்பி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான உடன்பாடு சனிக்கிழமையே கையெழுத்தானது. அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல்லிலும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இரு கட்சியினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து கடந்த 26ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட்: இதில் ஏற்கெனவே 4 விருப்பத் தொகுதிகளை கேட்டு திமுகவிடம் பட்டியலை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் திமுக- இந்திய கம்யூனிஸ்ட் இடையே 3-ஆவது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்புராயன், கோவை எம்பி நடராஜன், பழனிசாமி உள்ளிட்டோர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது.
இந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் திருப்பூர் எம்பி சுப்பராயன் செய்தியாளர்கள் சந்தித்தார். அவர் கூறுகையில் பொய்யும் புனைச்சுருட்டு உள்பட சகல அஸ்திரங்களையும் பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு தீர்வு அளிக்க சாரதியாக நின்று கொண்டிருப்பது திமுக.
மதசார்பற்ற கூட்டணி : அதன் தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி சகல நிச்சயமாக பாஜக அதன் சார்ந்த அணிகளும் முற்றிலும் வேரறுக்கப்படும். அதில் உறுதியான நம்பிக்கை இந்திய கம்யூனிஸ்டுக்கு உள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நிறைவான கட்டத்தை நெருங்கியுள்ளது.
திருப்பூர் எம்பி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு நல்லபடி நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் அது உடன்பாடாகியிருக்கிறது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மனரீதியில் இசைவு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள திருப்பூர், கோவை ஆகிய தொகுதிகளையும் கேட்டுள்ளோம். தற்போதைக்கு தொகுதிகளை அறிவிக்கும் நிலையை அடையவில்லை என்றார்.
4 தொகுதிகளா: கடந்த 2019ஆம் ஆண்டு திருப்பூர், கோவை ஆகிய இரு தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் கேட்ட போது காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூடுதலாக இடங்களை ஒதுக்கச் சொல்லி கேட்கிறார்கள். இதனால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற திருப்பூர், கோவையே ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றனர். எனவே 2 தொகுதியா இல்லை கம்யூனிஸ்ட் கேட்டது போல் 4 தொகுதிகள் கிடைக்கின்றனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி இதுவா? எம்ஜிஆர் - ஜெயலலிதா வென்ற தொகுதியாச்சே.. ரூட் கிளியர் -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
Anbumani: இந்த 108 நாட்களில்! சவுமியா உடலில் ஆவி புகுந்துவிட்டது! அன்புமணி கலகல! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications