அரசியல் கறை படியாதவர்.. எல்லோரையும் முன்னேற்றியவர்.. வசந்த குமார் மறைவு.. கமல்ஹாசன் இரங்கல்!
சென்னை: நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர் எம்பி வசந்த குமார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி வசந்த குமாரின் மறைவிற்கு வரிசையாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எல்லோருடனும் இயல்பாக, நட்பாக பழக கூடியவர் வசந்த குமார். அரசியல் கடந்த பலரோடு நட்பாக பழக கூடியவர் வசந்த் குமார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்பி வசந்த் குமார் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவரின் உடல்நிலை மோசம் அடையவே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவரின் மறைவிற்கு திரையுலகிலும், அரசியல் உலகிலும் பலரும் இரங்கல் தெரிவிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது டிவிட்டில், நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications