ஏமாந்த சிவகார்த்திகேயன்! சென்னை ஹைகோர்ட்டில் ஞானவேல் ராஜா மீது புதிய வழக்கு.. சிக்கல் மேல் சிக்கல்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‛மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தை சொன்னபடி முழுமையாக வழங்காமல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சம்பள நிலுவை தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை அவரது தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கான முதலீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‛மிஸ்டர் லோக்கல்'. இந்த திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கினார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் ரூ.11 கோடி வரை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழங்கி உள்ளார். மீதமுள்ள சம்பளத்தை அவர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும் கூட சொன்னபடி ஞானேவேல் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் ‛பெண்டிங்' உள்ளதாம்.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட ரூ.11 கோடிக்கான டிசிஎஸ் தொகையை ஞானவேல் ராஜா வழங்கவில்லை. இதனால் வருமான வரித்துறை சிவகார்த்திகேயனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.91 லட்சத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தான் சிவகார்த்திகேயன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . இதைத் தொடர்ந்தே அவர் தற்போதைய வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‛‛தனது நிலுவை சம்பளம் கிடைக்கும் வரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தற்போதைய திரைப்படங்களான'ரெபெல்,' 'சியான் 61,' மற்றும் 'பத்து தல' ஆகியவற்றில் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும்.
அதேபோல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை அப்படங்களின் ஓடிடி தளங்களுக்கான விற்பனை உரிமம், திரையரங்கம் விநியோகஸ்தர்கள் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும்படி பட்டியலிடப்பட்டுள்து. இந்த மனுவை நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தர் விசாரிக்க உள்ளார். இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications