எம்எஸ்எம்இ பந்த்.. ஒரே நாளில் ரூ.9000 கோடி போச்சு.. தமிழக அரசு பேச்சுவார்த்தை.. நல்ல செய்தி வருமா?
சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக ஒரே நாளில் ரூ. 9000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

40,000 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரூ.9000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை மேற்கொண்டார். தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சிட்கோ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்கட்டண குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications