எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் கடத்தப்பட்டாரா?.. சிபிசிஐடி விசாரணையில் தகவல்
Recommended Video
சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தன்னை யாரோ மர்ம நபர்கள் கடத்தியதாக முகிலன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் வெளியிட்டார்.
இதையடுத்து அன்றிரவே சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயிலில் முகிலன் புறப்பட்டார். அப்போது அவர் நாகர்கோவிலை வந்தடையவில்லை. மேலும் முகிலனின் தொலைபேசி இணைப்பும் கிடைக்கவில்லை.

உயர்நீதிமன்றம்
இதனால் முகிலன் காணாமல் போனதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகிலனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி பூங்கொடியும் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

ஆந்திர போலீஸ்
இந்த நிலையில் முகிலன் குறித்த துப்பு கிடைத்ததால் கடந்த ஜூன் 6-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

காட்பாடியில் முகிலன்
பின்னர் அவரை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தனர். இதையடுத்து அவரை வேலூர் போலீஸிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வஜ்ரவேல் தலைமையிலான போலீஸாரிடம் நள்ளிரவு 12 மணிக்கு முகிலன் ஒப்படைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில்
தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி போலீஸ் வசம் உள்ள முகிலனிடம் காலை முதல் கேமரா பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது 140 நாட்கள் எங்கிருந்தீர்கள். யாரேனும் உங்களை கடத்தினரா போன்ற தகவல்களை போலீஸார் விசாரித்தனர். அப்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் தன்னை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்தியதாகவும் , நினைவு திரும்பிய பின்னர் பார்த்தபோது தான் வேறு ஒரு மாநிலத்தில் இருந்ததாகவும் முகிலன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் உள்ளதால் முகிலன் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்படுவார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications