முகிலனை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.. ஹென்றி டிபேன் கோரிக்கை
Recommended Video
சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலனை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன், மதுரை செல்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். இதன் பிறகு, அவர் எங்கே இருக்கிறார் என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இந்த நிலையில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், சிபிசிஐடி காவல்துறை இந்த வழக்கை விசாரணையை சற்று தீவிரப்படுத்தியது. முகிலனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சுவரொட்டி மூலமாக சிபிசிஐடி போலீசார் அறிவிப்புகளும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில், முகிலனை போலீசார் அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியானது.
இதையடுத்து, ஆந்திர காவல்துறையை சிபிசிஐடி போலீசார் தொடர்பு கொண்டு, முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலன், ஆந்திர போலீசாரால் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து ஹென்றி டிபேன் இன்று கூறுகையில், முகிலன் உயிரோடு இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முகிலன் தொடர்பாக தகவல் தெரிவித்த சண்முகத்திற்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். காவல்துறை பொறுப்புடன் செயல்பட்டு விரைவிலேயே முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications