Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம்...அதிமுகவை தோற்கடிப்பதே இலக்கு - கருணாஸ் கடிதம்

முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாஸ். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை நிராகரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் கருணாஸ். ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவை நிராகரித்து தோற்கடிப்பதே நமது இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த கருணாஸ்க்கு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை. கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்த கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.

திமுகவிற்கு ஆதரவு தருவதாகவும் கூறினார். அங்கேயும் அழைப்பில்லாமல் போகவே, திமுக ஆதரவு நிலையையும் கை விட்டார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

கருணாஸ் கடிதம்

கருணாஸ் கடிதம்

இந்த நிலையில் கருணாஸ் தனது ஆதரவாளர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடைபெறவிருக்கின்ற சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை.

முக்குலத்தோர் வாக்குகள்

முக்குலத்தோர் வாக்குகள்

234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்கள் , ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது. அண்ணா திமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது.

கேலி கிண்டல் செவிசாய்க்க வேண்டாம்

கேலி கிண்டல் செவிசாய்க்க வேண்டாம்

தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் , ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என தலைமை கேட்டுக் கொள்கிறது.

இளைஞர்கள் அரசியல் பணி

இளைஞர்கள் அரசியல் பணி

இந்தத் தேர்தலில் திராவிட இயக்கங்களால் அரசியல் அனாதையாக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயம் அதன் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தையும் அரசியலின் தன்மையையும் புரிந்து எதிர்காலத்தில் எவரும் முக்குலத்தோர் அல்லாத அரசியல் நிலையை நினைத்து பார்க்க முடியாதபடி அரசியல் பணியாற்ற முன்வரவேண்டும். இடஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறது.

அதிமுகவை நிராகரிப்போம்

அதிமுகவை நிராகரிப்போம்

ஒரு அமைப்பின் அல்லது மனிதனின் வாழ்வில் சுப நிகழ்வுகளில் உடனிருப்பதை விட துக்க நிகழ்வுகளில் , கஷ்டகாலத்தில் தோளோடு தோள் கொடுப்பது மட்டுமே வரலாற்றில் பதியப்படும் முக்குலத்தோர் புலிப்படையின் இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம் என்பதை நிர்வாகிகள் தொண்டர்களான உங்கள் மீது தலைமைக்கு முழு நம்பிக்கை இருக்கிறது . 2021ல் இழந்த மரியாதையை அதிமுகவை நிராகரித்து தோற்கடிப்பதே நமது
இலக்கு என்றும் கருணாஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+