முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்டும் ஆய்வை கைவிடுங்கள்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை, சுற்றுச் சூழல் ஆய்வுக்கு அனுமதி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைபெரியாறு அருகே புதிய அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதில் எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்த வேண்டும்.
ஏற்கனவே வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கேரள அரசின் கோரிக்கையை எந்தவித பரிசீலனையும் இல்லாமல் நிராகரிக்க வேண்டும்.
சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications