பித்தலாட்டக்காரர்கள்.. கவுண்டமணி-செந்தில் வாழைப்பழக் காமெடி! நிர்மலா சீதாராமன், மோடியை சாடிய முரசொலி
சென்னை: சென்னை வெள்ள நிவாரண உதவியாக வழங்கப்பட்ட ரூ.6000 நிவாரணம் மத்திய அரசு வழங்கியது என பாஜகவினர் கூறி வரும் நிலையில் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடியை சுட்டிக்காட்டி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்து இருக்கிறது.
இதுகுறித்து முரசொலி தலையங்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, "கவுண்டமணி செந்தில் வாழைப்பழக் காமெடியைப் பார்த்தது தமிழ்நாடு.
ஒரு பழம் இங்க இருக்கு... இன்னொரு பழம் எங்க?" என்று கேட்பார் கவுண்டமணி.
அது தான்ணே இது என்பார் செந்தில்.

ஒன்றிய அரசிடம் நீதி கேட்டால், நீங்கள் செலவு செய்யும் பணம் எல்லாம் எங்கள் பணம் தான் என்று சொல்கிறார்கள். மாநில அரசுகளிடம் இருந்து பணத்தை வசூலித்து எடுத்துச் செல்லும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு அள்ளியும் தருவது இல்லை. கிள்ளியும் தருவது இல்லை. ஆனால் எள்ளி மட்டும் நகையாடுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,650 கோடி ரூபாயும் முதலமைச்சர் அவர்கள் கோரி உள்ளார்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 602 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர்கள் தரத் தயாராக இல்லை. அதற்காக மக்களை காத்திருக்க வைக்க முடியுமா?
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டை அடிப்படையில் தரச்சொல்லி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதற்கு மட்டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. புயல் மழையால் சாலைகள், பாலங்கள் பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் குடிநீர் தொட்டிகள், தெரு விளக்குகள், கிராமச் சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திட வேண்டும். அதற்கும் நிதி அதிகம் தேவைப்படுகிறது.
பொதுமக்களின் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும். இவை எதையும் மனதில் கொள்ளவில்லை ஒன்றிய அரசு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் கொடுத்தது. இது மோடி பணம் நான் என்று வஞ்சகப் பொய்யை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள். 24 லட்சம் பேருக்குக் கொடுங்கள் என்று ரூ.1,406 கோடியை ஒன்றிய அரசு கொடுத்திருந்தால்தான் அது மோடி பணம். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்தில் இருந்து எடுத்துத் தரும் பணம் எப்படி மோடி பணம் ஆகும்? இது மோசடித்தனம் அல்லவா?
நமக்கு முதலில் ரூ.450 கோடியும், பின்னர் ரூ.450 கோடியும் ஒன்றிய அரசு வழங்கி இருக்கிறது. இவை இரண்டும் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல. வழக்கமாக பேரிடர் காலங்களில் தருவதற்காக வைத்திருக்கும் நிதியில் இருந்து எடுத்துத் தந்துள்ளார்கள். இவை ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நிதி தானே தவிர செப்டம்பர் 4,17,18 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தரப்பட்ட நிதி அல்ல.
2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,666.80 கோடி. ஒன்றிய அரசால் ரூ.5.884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். நாம் கொடுக்கும் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து அவர்களுக்கு திவால் நோட்டீசும் கொடுத்து அழகு பார்ப்பதுதான் பா.ஐ.கவுக்கு தெரிந்த ஒரே வேலை.
இதை தலையாட்டிக் கொண்டு செய்வதற்காகத்தான் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில நிதி ஆதாரங்களும் சுரண்டப்பட்டு சுருட்டப்படுகின்றன என்பது மட்டுமே உண்மை ஆகும். இத்தகைய கார்ப்பரேட் முதலைகள் வேண்டுமானால் 'இது மோடி பணம்' என்று சொல்லிக் கொள்ளலாம். வாழைப்பழக் காமெடி வந்த படம் கரகாட்டக்காரன். இவர்களோ பித்தலாட்டக்காரர்கள்!" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications