"சர்வ நாசம்".. எடப்பாடியின் பிளான் "சர்வ மோசம்".. பாஜகவுக்கு தெரிந்த ஒரே வார்த்தை "ஒரே"தான்: முரசொலி
முரசொலி தன்னுடைய தலையங்கத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளது
சென்னை: சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூட துப்பு இல்லாத பழனிசாமிதான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார்.. அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம், சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும் என்று திமுகவின் முரசொலி கடுமையாக விமர்சித்திருக்கிறது.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதுவும், வரும் எம்பி தேர்தலிலேயே இந்த திட்டத்தை அமல்படுத்தலாமா? என்றும் மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.
இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது... காரணம், "ஒரே நாடு ஒரே தேர்தல்" அரசின் செலவை குறைக்கும் என்று அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

அதிபர் ஆட்சி
ஆனால், இந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. அதில் திமுகவும் ஒன்று.. அந்தவகையில், டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் தன்னுடைய கருத்தையும் விரிவாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பதால், இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்.. அதனால், இதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.. அதேபோல, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசனும் கடுமையாக சாடி உள்ளார்.

பசப்புகள்
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கருத்து கேட்ட நிலையில், திமுகவின் நாளேடான முரசொலியும் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. அதில், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது.. அதில், பாஜகவுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'ஒரே'தான்! எதற்கெடுத்தாலும் 'ஒரே சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்வு ஒரே தேர்தல் ஒரே வரி ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே ஒரே ஒரே
எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது 'ஒரே' மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது. 'நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்' என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்?

கொல்லைப்புறம்
பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? ஐந்து ஆண்டுகள் கழித்து. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை. பா.ஜ.க.வின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா?

மிச்சம் வேணாமா
குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலையே இரண்டு கட்டங்களாகத்தான் நடத்தினார்கள். ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. ஒருமாநில சட்டமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத நாட்டில்தான் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் - நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தப் போகிறார்களாம்! உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறதே? அதனையும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே? பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறதே? இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா?

வில்சன்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. நடைமுறை சாத்தியமற்றது' என. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த முதலமைச்சரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்தில் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த கடிதத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார். மக்களவையாக இருந்தாலும். சட்டமன்றப் பேரவையாக இருந்தாலும் அதன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள்.

2 தேர்தல்கள்
அதனை முன்கூட்டியே கலைக்க முடியாது என்பதையும் முதலமைச்சர் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக் காலமானது அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது குறைக்கப்பட வேண்டும். இதன் மூலமாக மாநிலங்களில் குழப்பமே ஏற்படும். இரண்டு தேர்தல்களின் தன்மையும் வேறுவேறு. தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவது நாடாளுமன்றத் தேர்தல். மாநில நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டியது சட்டமன்றத் தேர்தல்.

சர்வநாசம்
இரண்டையும் குழப்பிக் கொள்ள முடியாது. எல்லாம் தேர்வு தானே என்று அறிவியல் தேர்வையும். கணக்கையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்ல முடியுமா? நேரமும். பணமும் மிச்சம் ஆகுமே?! ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூட துப்பு இல்லாத பழனிசாமிதான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம், சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும்! என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications