ரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி
சென்னை: நல்ல மனதை புண்படுத்தும் செய்திகள் இனி வெளியிடப்படாது என முரசொலி நிர்வாகம் கூறியுள்ளது.
ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தில் ஒரு சிலருக்கு பதவி பறிக்கப்படுவதும் புதியவர்களுக்கு அது மாற்றி வழங்கப்படுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் குறிப்பிட்ட அந்த நிர்வாகிகள் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததே காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் தாங்கள் 30 முதல் 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து வருகிறோம். எங்களை நீக்குவதாக என நீக்கப்பட்ட நிர்வாகிகள் கேட்டது ரஜினிகாந்தை எட்டியது. இதையடுத்து அவர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார்.
அதில் அவர் கூறுகையில் 30- 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது
மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ இல்லை அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகி விடாது. தன் குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்ற பணிகளுக்கு வர வேண்டாம்.
யாரும் மன்றத்துக்காக தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை கிண்டல் செய்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியானது.
இது ரஜினி தரப்பையும் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து முரசொலி ஆசிரியர் குழுவை கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.
முரசொலி ஆசிரியர் வெளியிட்ட செய்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளி வந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications