முருகனின் வேல் வன்முறை ஆயுதமா? கேஎஸ் அழகிரி நிரூபிக்கத் தயாரா? முருக பக்தர்கள் கொதிப்பு

வேல் என்றால் வன்முறைக்கான ஆயுதம் என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கூறியுள்ளதாற்கு முருகபக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேல் ஒரு வன்முறை ஆயுதம் என்றும் எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கிற ஒரு ஆயுதம்..! மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கிற ஆயுதம்..! என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார் கே.எஸ்.அழகிரி அவரது இந்த கருத்துக்கு முருக பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கே.எஸ் அழகிரி ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி கவசம் தொடங்கி வேல் ஆயுதம் வரை கடந்த சில மாதங்களாகவே இந்துக்களுக்கு எதிராக பல கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்திற்கு சர்ச்சையான அர்த்தங்களை கூற அதனை கையில் எடுத்துக்கொண்டது பாஜக.

சஷ்டி நாட்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணமும் வேல் பூஜையும் நடத்த ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆங்காங்கே வேல் யாத்திரையும் நடத்தும் பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்

அதிமுக பற்றி சர்ச்சை கருத்து

அதிமுக பற்றி சர்ச்சை கருத்து

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக அரசு ஒரு விசித்திரமான ஜந்து என்று கடுமையாக விமர்சித்தார். அவர்களுக்கு எந்தவிதமான உருவம் கொடுப்பது என்றே நம்மால் சொல்ல முடியாது என்று கூறியதோடு ஐ சி எம் ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது வைரஸ் தொற்று ஒவ்வொரு நேரத்திற்கும் உருமாறும் வைரஸ் தொற்று உருமாறுவது போலதான் அதிமுகவும் என்றார்

தமிழகத்தில் மாற்றம் வராது

தமிழகத்தில் மாற்றம் வராது

வேல் யாத்திரை அல்ல வாள் யாத்திரை செய்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது, ஆன்மீகம் என்பது இறை நம்பிக்கை உடையது. மகாத்மா காந்தி ஆன்மீகத்தை கற்பித்தார், ஆர்எஸ்எஸ் மதவெறியை ஊட்டினார்கள் என்று கூறிய கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டில் கிருபானந்த வாரியார் கையில் முருகப்பெருமான் இருந்தவரை இந்த நாடு நல்லா இருந்தது என்றார்.

வேலை கையில் எடுத்த பாஜக

வேலை கையில் எடுத்த பாஜக

முருகப்பெருமானை தோளிலும் கையில் வைத்துக் கொண்டு அவர் நாடு முழுவதும் சுற்றி வந்தார். மக்கள் முருகர் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று கூறினார் பாரதிய ஜனதா முருகரை விட்டுவிட்டு, கையிலுள்ள வேலை மட்டும் எடுத்துக்கொண்டனர், இவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

வேலாயும் வன்முறை

வேலாயும் வன்முறை

ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் பார்த்தால், வேலுக்கு என்ன விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்றால் வேல் ஒரு வன்முறை ஆயுதம்..! எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கிற ஒரு ஆயுதம்..! மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கிற ஆயுதம்..! என்று சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார் கே.எஸ்.அழகிரி.

கொதிக்கும் முருக பக்தர்கள்

கொதிக்கும் முருக பக்தர்கள்

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த கருந்து முருகபக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் என்ற சொல்லுக்கு அப்படி அர்த்தம் ஏதும் குறிப்பிடபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கே.எஸ்.அழகிரி எந்த ஊரு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் குறித்து வன்முறை ஆயுதம் என்று அவதூறாக குறிப்பிட்டு உள்ளது என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பண்டைய தமிழர்கள் ஆயுதம்

பண்டைய தமிழர்கள் ஆயுதம்

வேல் என்பதற்கு இந்து தெய்வமான முருகனின் தெய்வீக ஈட்டி என்றும் பண்டைய தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஈட்டி பொதுவாக வேல் என்று அழைக்கப்படுவதாக அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் முருகபக்தர்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+