ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலியா? அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ விளக்கம்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 3 மணி நேரத்தில் சிகிச்சையை முடித்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருந்தார். இந்த நிலையில் திடீரென இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலைக் குறித்து நலம் விசாரித்தார். அதன்பின், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.. மகிழ்ச்சி என்று பதிவிட்டார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன உடல்நலக் குறைவு என்று தெரியாததால், ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மணி நேர சிகிச்சைக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான் உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நீர்ச்சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனை முடித்து வீடு திரும்பினார்.
அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் நலனுடம் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அக்கறையுடன் கூறி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications