ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலியா? அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ விளக்கம்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 3 மணி நேரத்தில் சிகிச்சையை முடித்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருந்தார். இந்த நிலையில் திடீரென இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலைக் குறித்து நலம் விசாரித்தார். அதன்பின், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.. மகிழ்ச்சி என்று பதிவிட்டார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன உடல்நலக் குறைவு என்று தெரியாததால், ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மணி நேர சிகிச்சைக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான் உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நீர்ச்சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனை முடித்து வீடு திரும்பினார்.
அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் நலனுடம் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அக்கறையுடன் கூறி வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications