நீங்க எந்த வாட்ச் கட்டுறீங்க? முள் கடிகாரத்துல இவ்ளோ “மேட்டரா” - ஜேம்ஸ் வசந்தன் சொல்றாரு கேளுங்க
சென்னை: டிஜிட்டல் கடிகாரத்தைவிட முள் கடிகாரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்து அறிவியல்பூர்வமான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
ஒரு காலத்தில் கவுரவமான பொருளாக பார்க்கப்பட்டு வந்த கடிகாரம் தற்போது செல்போனில் வருகையால் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. திருமணம், பணி நேர்காணல், தேர்வு போன்ற முக்கிய தருணங்களுக்கு மட்டுமே பலரும் கடிகாரம் அணிகிறார்கள்.
அதுவும் இப்போதெல்லாம் ஸ்மார்ட் வாட்ச் வந்துவிட்டதால் பெரும்பாலானோர் அதை அணிந்துகொண்டு இருக்கிறார்கள். இதனால் காலம்காலமாக இருந்து வரும் முள் கடிகாரங்களின் பயன்பாடு குறைந்து இருக்கிறது.

ஜேம்ஸ் வசந்தன்
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முள் கடிகாரத்தின் சிறப்புகள் குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில், "எந்தவிதக் கடிகாரத்தைப் (Analog or Digital) பயன்படுத்துகிறோம் என்பது அவ்வளவு பெரிய விஷயமா எனா? ஆம், பெரிய விஷயந்தான்.

அறிவியல் - உளவியல்
இன்றைய Digital கடிகாரங்களைப் பார்ப்பவரைக் காட்டிலும், பழைய (Analog) தொழில்நுட்பக் கடிகாரத்தை பார்ப்பவர்க்கு எவ்வளவு நேரம் செலவழித்திருக்கிறோம்; இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறதென்கிற தகவல்களும் கூடவே உணர்த்தப்படும். இது அறிவியல் - உளவியல் ஆய்வு. எப்படி என்று பார்ப்போம்.

வித்தியாசம்
எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் கடிகாரத்தைப் பாருங்கள். அது 9:30 என்கிற நேரத்தைக் காட்டுகிறது. அது இப்போது என்ன நேரம் என்பதைச் சொல்கிறது. அவ்வளவுதான். அனலாக் எனப்படும் முள் கடிகாரத்தைப் பாருங்கள். அதிலுள்ள தகவலின் ஆழத்தைப் பாருங்கள். இங்கு நாம் என்ன காண்கிறோம்? 11:55 அவ்வளவுதானா? இல்லை, அதோடு கூட வேறு சில செய்திகளும் உணர்த்தப்படுகின்றன.

கூடுதல் தகவல்
இந்த படத்தை பாருங்கள். காலை எவ்வளவு நேரம் செலவழித்தோம், இரவுக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது. மாலையாக இன்னும் எவ்வளவும் நேரம் உள்ளது என்பதை அது முள் கடிகாரம் காட்டுகிறது. அதுதான் நம்மையும் அறியாமல் நம் மூளை புரிந்துகொள்கிற, கணக்கிடுகிற தகவல். இதற்கு நாம் தனிப்பட்ட சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தானாக இயல்பாக நம் வாழ்க்கை முறையால் நம் மூளை கிரகித்துக்கொள்கிற விஷயம். அதுவே, டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்க்கும்போது இந்த பிற தகவல்களை நாம் சிரத்தை எடுத்து, சிந்தித்து, கணக்கிட வேண்டியதாய் இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications