விஸ்வரூபம் எடுக்கும் வண்ணாரப்பேட்டை தடியடி.. சென்னை உள்பட தமிழகத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்
Recommended Video
சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டையில் போலீஸார் தடியடியை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின.
இதில் டெல்லி ஷாகீன்பாக் போல பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

120 பேர் கைது
அப்போது காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் சிலரை அடித்து உதைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே 120 பேரை போலீஸார் கைது செய்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கத்திப்பாரா சந்திப்பு முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம்
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவண்ணாமலை, வந்தவாசி, மதுரை, நெல்பேட்டை, கோரிப்பாளையம், திருப்பூர், தாராபுரம், திருவள்ளூர், செங்குன்றம் திருச்சி பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது போல் சென்னை வண்ணாரப்பேட்டை, பிராட்வே பகுதியிலும், மதுரை ஜின்னா திடல், கரூர், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மறியல்
இதனால் பதற்றம் எழுந்துள்ளது. இதனிடையே இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து சென்னை காவல் துறை கமிஷனர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல்
அது போல் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து தேனி பெரிய பள்ளிவாசலின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸாரின் அராஜக போக்கை கண்டித்து குன்னூரில் வணிகர்கள் கடைகளை அடைத்துவிட்டனர். அது போல் திருச்செந்தூரிலும் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லை
கும்பகோணம் மாவட்டத்தில் தபால் நிலையம் வெளியே 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அது போல் நெல்லை மேலப்பாளையத்திலும் போராட்டம் நடந்தது. ராமநாதபுர மாவட்டத்தில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இணை ஆணையர் விஜயகுமாரி, இரு பெண் காவலர்கள், ஒரு உதவி ஆய்வாளர் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரையும் சென்னை ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications