Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லகண்ணுவை காப்பாற்ற அரசு மருத்துவர்கள் எடுத்த பெரு முயற்சி - முத்தரசன் சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 101. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நல்லகண்ணுவை காப்பாற்ற அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மிகப்பெரிய முயற்சி எடுத்தனர். இதுவே தனியார் மருத்துவமனை என்றால் 6 மாதங்களுக்கு முன்பே ஐயா இறந்திருப்பார் என்று சிபிஐ கட்சியின் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியுமான நல்லகண்ணு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். எளிமை, நேர்மைக்கு பெயர் பெற்ற நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நல்லகண்ணு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Mutharasan

அரசு மருத்துவர்களின் முயற்சி

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐயா நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். உண்மையில் இந்த சந்திப்பில் ராஜீவ் அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை ஆகியோரை நான்கு வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

இதுவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருப்பார். இங்குள்ள மருத்துவர்கள் நல்லகண்ணுவை காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய முயற்சி எடுத்தனர் சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்தார்கள். அவர்களின் முயற்சி தோற்று போகவில்லை. இயற்கையின் அழைப்பை யாராலும் நிராகரிக்க முடியாது. அதனடிப்படையில் நல்லகண்ணு இயற்கையின் அழைப்பில் இருக்கிறார்.

முதல்வருக்கு நன்றி

அவரின் உடல் பாலன் இல்லத்தில் நாளை மாலை 3.30 மணி வரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பிறகு அவரின் உடல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படும். முதலமைச்சர் பலமுறை இங்கு வந்து நல்லகண்ணு ஐயாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வேன் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+