தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தூக்கிவாரிப்போடும் பின்னணி- அம்பலப்படுத்தும் முத்துநகர் படுகொலை படம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக உருவாக்கப்பட்ட புலனாய்வு திரைப்படமான முத்துநகர் படுகொலை இன்று வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடியில் தொழிலதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை இயங்கி வந்தது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் இறுதி அறிக்கை கடந்த புதன்கிழமை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

முத்துநகர் படுகொலை ஆவணப்படம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக "முத்துநகர் படுகொலை" என்ற பெயரில் பல்வேறு உண்மைகளையும் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது.

இன்று வெளியீடு
ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக வைத்து மெரினா புரட்சி என்ற பெயரில் ஆவணப்படம் இயக்கியவர் எம்.எஸ்.ராஜ். இவரது "முத்துநகர் படுகொலை" புலனாய்வு படம் Tamils OTT மற்றும் விமியோ ஆகிய ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து 22 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இந்த திரைப்படம் அதுகுறித்து பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications