கறிக்கடைக்குள் காலையிலேயே கிளம்பிய பரபர.. நாளை கறிக்கடை லீவு.. திடீர்னு ஓடிவந்து தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஜனவரி 15ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே அறிக்கை வெளியாகியிருந்தது. இந்நிலையில், திடீரென புது புரளி ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால், இதற்கும் உரிய விளக்கம் அரசு தரப்பில் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை இன்று தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.. தமிழ்நாட்டில் இந்த பண்டிகை இன்று முதல் 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு உதவிய சூரியன், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும்விதமாக சிறப்பிக்கப்படுகிறது.

நாளை மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு ஆற்றிய மாடுகளை வணங்கக்கூடிய நாளாகும். எனவே, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்... மாடுகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய இந்த தினத்தில்தான், தமிழர்களின் வீரத்தை போற்றக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படும்.
திருவள்ளுவர் தினம்: இதே நாளில்தான் திருவள்ளுவர் தினமும் கொண்டாட்டப்படுகிறது. திருவள்ளுவரின் கருத்துகளைப் போற்றி, அவரது நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அறிகுறியாகும். ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி ஆகியன வதை செய்வதும், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் தடை செய்யப்படுகிறது. அன்றைய தினம், மாநகராட்சி பகுதியில் உள்ள இந்த இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது விதியாகும்.
அந்தவகையில், சென்னை மாநகரின் முக்கிய பகுதியிலுள்ள இறைச்சி கடைகள் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அறிவிப்பு: "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த கட்டுப்பாட்டில் அவர்கள் கூறியிருப்பதாவது சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட உள்ளது.
இறைச்சிக் கடைகள் வியாபாரிகள் பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகின்றது தை ஒன்றாம் தேதி தைத்திருநாள், தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினம், தை மூன்றாம் தேதி காணும் பொங்கல் என மூன்று நாட்களும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இறைச்சி கடைகள்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தை இரண்டாம் நாள் இறைச்சி கடைகள் மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடையை மீறி யாரேனும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வருடம்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பித்திருப்பதாக, திடீரென சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவ தொடங்கியது.. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் உண்மை சரிப்பார்ப்புக்குழு சார்பில் புதிய விளக்கம் ஒன்று தற்போது தரப்பட்டுள்ளது.
திடீர் புரளி: "அதில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15-01-2025 அன்று பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட உள்ளன என்று பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.. இது புதிய உத்தரவல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து வெளியாகும் அறிவிப்பே.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் ஜனவரி 23, 1980 தேதியிட்ட அரசாணை 45-ன் படி, திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய 3 நாட்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை: அதேபோல, திருவள்ளுவர் தினத்தன்று, மது விற்பனையில் ஈடுபட்டால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றால், பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications