மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது என்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அதாவது 31 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

My happiness will increase after Magalir urimai thogai scheme starts: TN CM MK Stalin

இந்த திட்டத்தை கருணாநிதி படித்த திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது:- அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் கனவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன். மதுரையில் தொடங்கிய காலை உணவு திட்டம் 17 லட்சம் பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. திருக்குளவையில் பிறந்த சூரியன் இன்று இந்தியா முழுவதும் ஒளி வீசுகிறது. தமிழ் பற்று, சிந்தனை திறன் மூலம் கருணாநி.

My happiness will increase after Magalir urimai thogai scheme starts: TN CM MK Stalin

வாழ்க்கை முழுவதும் போராடியவர், தான் அடக்கம் செய்ய வேண்டிய இடத்தையும் போராடியே பெற்றவர்தான் கருணாநிதி. சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+