மயில் எங்கே? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இறங்கிய.. 70+ தீயணைப்பு வீரர்கள்! என்னாச்சு?
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை ஒன்று காணாமல் போனது தொடர்பாக அந்த கோவில் குளத்தில் தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையடுத்து கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் காணாமல் போனது. இது லிங்கத்தை மலரால் அர்ச்சனை செய்யும் தோற்றம் கொண்ட மயில் ஆகும்.

மயில்
இந்த மயில் காணாமல் போன பின்பு அங்கு வேறு மயில் முறையின்றி, விதிகளை மீறி மாற்றி வைக்கப்பட்டது. இது பாம்பை அலகில் கொண்டு இருக்கும் மயில் ஆகும். இந்த மயிலை முறையின்றி வைத்ததாக கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்த மயில் ஆகம விதிகளுக்கு எதிராக வைக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தார்.

வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணை செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு காப்பிவல்துறை தரப்பு, விசாரணை செய்ய 6 வாரம் அவகாசம் கேட்டது. அதன்படியே விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த கோர்ட் விசாரணையில், கோவில் குளத்தில் சிலை இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் விசாரணையின் படி கோவில் குளத்தில் சிலை இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தமிழ்நாடு காவல்துறை தரப்பு கூறியது.

சிலை காணவில்லை
மேலும் கோவில் குளத்தில் சோதனை செய்யவும் போலீசார் தரப்பு அனுமதி கேட்டனர். இதையடுத்து போலீசார் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கோவில் குளத்தை சோதனை செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து கோவில் குளத்தில் நவீன அறிவியல் முறைப்படி தேடவும், அங்கு முழுமையாக தேடுதல் பணிகளை செய்து 2 வாரங்களில் முடிவுகளை சமர்ப்பிக்கவும் போலீசார் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தேடுதல் வேட்டை
இதையடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக அந்த கோவில் குளத்தில் தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு மொத்தம் 70க்கும் அதிகமான தீயணைப்பு படையினர் களமிறங்கி தேடுதல் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிறிய ரக போட்டுகள் மூலம் அங்கு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications