மயிலை சிவா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி அழகு ராஜா சரண்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!
சென்னை: ரவுடி மயிலை சிவா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவுடி அழகு ராஜா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். தோட்டம் சேகரின் மகனான ரவுடி அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை 3-வது, கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிவக்குமார் என்ற மயிலை சிவா மீது 3 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் என உள்ளிட்ட 35 வழக்குகள் இருந்தன. கொரோனா பரவல் காலகட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரவுடி மயிலை சிவா ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடனை வசூலிக்க சென்ற இடத்தில், அசோக் நகரில் 2021 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் 5 பேர் கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி விரைந்த அசோக் நகர் போலீசார் 5 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க தோட்டம் சேகரின் மகன்கள் இருவர் திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பின் மயிலை சிவாவை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜா இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அழகுராஜாவை போலீசார் பிடிக்க முயன்ற நிலையில் அவர் காரில் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே தனிப்படை போலீஸ்காரர் அழகுராஜாவை பிடிக்க முயன்ற நிலையில், அழகுராஜா காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதில் தொங்கியபடி சிறிது தூரம் வரை சென்ற போலீஸ்காரர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சென்னையை உலுக்கிய ரவுடி மயிலை சிவா கொலையில் தேடப்பட்டு வந்த தோட்டம் சேகரின் மகனும், முக்கிய குற்றவாளியுமான ரவுடி அழகு ராஜா, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. கீதா ராணி முன்பு இன்று (டிசம்பர் 15) சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் சரண் அடைந்த அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழகு ராஜா மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அழகுராஜாவை சிறையில் அடைத்தனர்.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications