Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலை சிவா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி அழகு ராஜா சரண்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவுடி மயிலை சிவா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவுடி அழகு ராஜா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். தோட்டம் சேகரின் மகனான ரவுடி அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை 3-வது, கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த சிவக்குமார் என்ற மயிலை சிவா மீது 3 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள் என உள்ளிட்ட 35 வழக்குகள் இருந்தன. கொரோனா பரவல் காலகட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரவுடி மயிலை சிவா ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடனை வசூலிக்க சென்ற இடத்தில், அசோக் நகரில் 2021 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Chennai rowdy crime

இது தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் 5 பேர் கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி விரைந்த அசோக் நகர் போலீசார் 5 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க தோட்டம் சேகரின் மகன்கள் இருவர் திட்டம் தீட்டி 24 ஆண்டுகளுக்கு பின் மயிலை சிவாவை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜா இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அழகுராஜாவை போலீசார் பிடிக்க முயன்ற நிலையில் அவர் காரில் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே தனிப்படை போலீஸ்காரர் அழகுராஜாவை பிடிக்க முயன்ற நிலையில், அழகுராஜா காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதில் தொங்கியபடி சிறிது தூரம் வரை சென்ற போலீஸ்காரர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சென்னையை உலுக்கிய ரவுடி மயிலை சிவா கொலையில் தேடப்பட்டு வந்த தோட்டம் சேகரின் மகனும், முக்கிய குற்றவாளியுமான ரவுடி அழகு ராஜா, சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. கீதா ராணி முன்பு இன்று (டிசம்பர் 15) சரண் அடைந்தார்.

நீதிமன்றத்தில் சரண் அடைந்த அழகு ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழகு ராஜா மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அழகுராஜாவை சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+