Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குகளை ‘ஏவுவதா? சீமான் வலதுகரம் சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை கைது செய்வதற்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் அகற்ற கூடாது என பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம் தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி முதலில் கைது செய்யப்பட்டார்.

Naam Tamilar Party condemns arrest of BJP Amar Prasad Reddy

அடுத்தடுத்த வழகுகள்- குண்டாஸ் பாய்கிறது?: நீதிமன்றங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் அமர் பிரசாத் ரெட்டிக்கு உடனே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மீது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி பிரதமர் மோடி படத்தை ஒட்டியது, சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் மோதியது உள்ளிட்ட பழைய வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது 4-வதாக தென்காசி வழக்கு ஒன்றிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த வழக்குகள் பாய்வதால் அமர் பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் சாத்தியம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாட்டை துரைமுருகன் கண்டனம்: பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி மீதான இந்த தொடர் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ! ஒரு வழக்கில் கைது செய்துவிட்டு தொடர் வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. திமுகவை எதிர்த்து அரசியல் பேசினால் குண்டர் சட்டத்தில் அடைப்பீர்கள் என்றால் உங்கள் ஆட்சி முடிந்த பிறகு இது உங்களுக்கே திரும்ப நடக்கும். அமர் பிரசாத் ரெட்டியின் கோட்பாட்டில் முரண் இருந்தாலும் அவருக்கு தொடர் வழக்குகள் வைப்பது கண்டிக்க வேண்டியது. கருத்து சுதந்திரம் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+