பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குகளை ‘ஏவுவதா? சீமான் வலதுகரம் சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம்!
சென்னை: பாஜகவின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை கைது செய்வதற்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் அகற்ற கூடாது என பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம் தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி முதலில் கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த வழகுகள்- குண்டாஸ் பாய்கிறது?: நீதிமன்றங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் அமர் பிரசாத் ரெட்டிக்கு உடனே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மீது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி பிரதமர் மோடி படத்தை ஒட்டியது, சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் மோதியது உள்ளிட்ட பழைய வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது 4-வதாக தென்காசி வழக்கு ஒன்றிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த வழக்குகள் பாய்வதால் அமர் பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் சாத்தியம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாட்டை துரைமுருகன் கண்டனம்: பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி மீதான இந்த தொடர் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ! ஒரு வழக்கில் கைது செய்துவிட்டு தொடர் வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. திமுகவை எதிர்த்து அரசியல் பேசினால் குண்டர் சட்டத்தில் அடைப்பீர்கள் என்றால் உங்கள் ஆட்சி முடிந்த பிறகு இது உங்களுக்கே திரும்ப நடக்கும். அமர் பிரசாத் ரெட்டியின் கோட்பாட்டில் முரண் இருந்தாலும் அவருக்கு தொடர் வழக்குகள் வைப்பது கண்டிக்க வேண்டியது. கருத்து சுதந்திரம் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications