தோற்றாலும் ஆட்டநாயகனாகும் நாம் தமிழர்.. அடுத்த தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட சீமான்.. செம வியூகம்!
சென்னை: திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பின்னடைவை சந்தித்து வந்தாலும் இந்த தேர்தல் களத்தின் ஆட்டநாயகனாக அக்கட்சி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் புதுமையை புகுத்தி வருகிறது. வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்குகிறது.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது.

5.58 சதவீதம்
கடந்த 2016ஆம் ஆண்டு வெறும் 1.5 சதவீதமாக இருந்த இதன் வாக்குச் சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 5.58 சதவீதமாக உயர்ந்து வருகிறது. 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றது.

117 தொகுதிகள்
இந்த முறையும் 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என களம் கண்டது நாம் தமிழர் கட்சி. தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

திருவொற்றியூர்
இதில் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குப்பனை விட வாக்குகள் குறைவாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். அவரது கட்சியின் மற்ற வேட்பாளர்கள் யாரும் கணிசமான வாக்குகளை பெறவில்லை.

ஆட்டநாயகனாகும்
இந்த தேர்தலில் அதிமுக, திமுகவின் வாக்குகளை நாம் தமிழக் கட்சி பிரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இக்கட்சி ஒரு தொகுதியிலும் ஜெயிக்காவிட்டாலும் அதிக வாக்குகளையும் வாக்கு சதவீதத்தையும் பெற்று தேர்தல் எனும் ஆடுகளத்தில் ஆட்டநாயகனாக நாம் தமிழர் உருவெடுக்கும். இந்த வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு இக்கட்சிக்கு உதவும் என்பதில் துளிக் கூட சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications