நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு!
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து முடிந்து இன்னும் முடிவு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில் சங்கத்திற்குள் சில பிரச்சனைகள் நடந்து வருகிறது. சில ஊழியர்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு கூடாது
இந்த அறிவிப்பை தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்த்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அளித்த பேட்டியில், தென்னிந்திய நடிகர் சங்கம் தனி அமைப்பு. இதை அரசு கட்டுப்படுத்த நினைக்க கூடாது. 250 கோடி ரூபாய்க்கு மாளிகை போல கட்டிடம் கட்டி இருக்கிறோம். அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

புகார்
3222 பேர் மட்டுமே இருக்கும் சின்ன அமைப்புதான் நாங்கள்.இதில் 4 பேர் கொடுத்த புகாரில்தான் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராதா ரவியின் சகோதரரும் புகார் அளித்துள்ளார். 4 பேர் கொடுத்த புகாரில், 3200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதுதான் அரசியலமைப்பா?

பென்ஷன் வரவில்லை
தங்களுக்கு பென்ஷன் வரவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தமிழ் அரசில் புகார் அளித்துள்ளனர். எங்களிடம் புகார் அளிக்கவே இல்லை. இதற்குத்தான் தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது.

தனி அதிகாரி நியமனம்
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்ததை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம். நீதிமன்றம் மூலம் இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.
-
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications