நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல.. இது கிட்னி முறைகேடு.. மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்!
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை, கிட்னி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்தால் தான் அது திருட்டு என்று கூறிய அவர், இன்னும் ஒரு வாரத்தில் கிட்னி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று முறைகேடாக விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய போலியான சான்றிதழ் வழங்கி அங்கீகாரம் அளிக்கும் அரசுக் குழுவை ஏமாற்றியது அம்பலமாகியது. இந்த விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தமிழக அரசு தரப்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், திருச்சி சீதா ஆகிய மருத்துவமனைகள் இனி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதற்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்னி மற்றும் மனித உறுப்புகளைத் திருடுகிறார்கள் என்று பேசி வருகின்றனர். இது திருடா அல்லது முறைகேடா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் கிட்னி உள்ளிட்டவை எடுத்தால் திருட்டு. ஆனால் இது முறைகேடு. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கிறது. அப்போது காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து சிஎஸ்ஆர் நகல் கொடுத்துள்ளார். அதேபோல் காவல்துறை அதிகாரி தரப்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட போது, சுகாதாரத்துறை சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சுகாதாரத்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு முதற்கட்ட அறிக்கை வந்துள்ளது. அதனடிப்படையில் 2 மருத்துவமனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 வார கால விசாரணை முடிந்து முழுமையான அறிக்கை வந்தபின், துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் இடைத்தரகர்கள் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை அறியவே ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications