ஸ்டாலினுக்கு போன் போட்ட மோடி.. ஆக்சிஜன் இருப்பு உட்பட.. கொரோனா தடுப்பு பற்றி ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பது குறித்தும் முதல்வரிடம், மோடி கேட்டறிந்துள்ளார்.

கொரோனா நிலவரம் தொடர்பாக, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
நடக்காத ஓட்டு ஸ்விங்.. மோடி, அமித் ஷா முட்டி மோதியும்.. மேற்கு வங்கத்தில் பாஜக தோற்றுப்போனது ஏன்?
இதன் பின்னர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருடனும் மோடி ஆலோசனை நடத்தினார். இதேபோல ஸ்டாலினுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார். மத்திய அரசு மூலம் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் அந்தந்த மாநில முதல்வர்களுக்கு உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications