Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டையில் ஜாதி பாகுபாடு! பட்டியலினத்தவர் மீது கஞ்சா போதையில் தாக்குதல்! நீலம் பண்பாட்டு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டையில் பட்டியலினத்தவரை மது, கஞ்சா போதையால் பணத்தை பறித்து அவரை கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வெளியான எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் நீலம் பண்பாட்டுமையம் செயல்வீரர் அம்பேத்கர் நகர், பட்டியல் சமூகத்தை சேர்ந்த முருகானந்தம் (பொறியாளர்) வீட்டு water Proofing வேலை செய்து நிறைவு பெற்று சம்பளம் ரூ.13,500 பணத்தை வாங்கி வீடு திரும்பும் போது திடீரென குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கஞ்சா, மது அருந்திய 4 நபர்கள் அடித்து கொலை முயற்சி செய்தும், குற்றவாளிகள் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்தை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கின்றது!

Neelam Culture centre condemns caste discrimination in Pudkottai

அவர் 18.01.2024 அன்று புதுக்கோட்டை நகரம் அம்பேத்கர் நகரிலிருந்து 20 km தொலைவில் உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் நண்பகல் 3.15 மணிக்கு தனது நிறைவு பெற்ற பணியின் சம்பளம் ரூ13,500 தொகையை பாக்கெட்டில் வைத்து வந்துள்ளனர், அப்பகுதியில் சிறுநீர் கழிக்கும் போது தீடீரென அடையாளம் தெரியாத கஞ்சா, மது அருந்திய 4 பேர் கொண்ட கும்பல் முருகானந்தம் அவர்களை எந்த ஊர் என்று கேட்டு மிரட்டி அவரை கீழே தள்ளி அடித்து மொத்த பணத்தையும் திருடி உள்ளனர், தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,.

பணத்தை திருடியவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த பிரச்சினையை எடுத்து கூறிய முருகானந்தம் தற்சமயம் 4 நபர்கள் முருகானந்தம் உடன் வந்த தியாகு என்பவரையும் அடித்துள்ளனர்.

Neelam Culture centre condemns caste discrimination in Pudkottai

தற்போது மூன்றாவது நாளாக முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தியாகுவை வண்டியில் அழைத்து சென்று அடித்துள்ளனர். அவரும் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று காவல்துறை முழு வாக்குமூலம் பெற்றுள்ளனர். 4 நபர்களுக்கும் 21 வயது தான் ஆகிறது இந்த வயதில் தான் சாதியவாதிகள் ஒவ்வொரு பகுதியிலும் கஞ்சா ,மது அருந்திய சுற்றி வருகின்றனர். இது சமூகத்திற்கும் , குடும்பத்திற்கும் ஆபத்தானது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு களப் பணியாற்றி வரும் எங்கள் செயல்வீரருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் விரைந்து கொலை முயற்சி, பணம் திருடிய சாதிய குற்றவாளிகளை உடனடியாக #SC_St வன்கொடுமை_தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும்.

அன்பு சகோதரர் முருகானந்தம் விரைந்து முழு குணமடைந்து மீண்டும் சமூக பணிக்கு வர வேண்டும், நம் அனைவரும் துணை நிற்கிறோம்! இவ்வாறு அந்த நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+