ஆள் மாறாட்ட மோசடி.. அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
சென்னை: ஆள்மாறாட்ட மோசடி எதிரொலியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து நீட் தேரவு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேந்திரன் தேனி மாவட்ட க. விலக்கு போலீஸ் ஸ்டேசனில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து முதலாம் ஆண்டு சேர்ந்ததாக புகார் அளித்தார்.

டிஜிபி திரிபாதி உத்தரவு
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தமிழக டிஜிபி திரிபாதியின் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி புலன் விசாரணை
சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் உத்தரவின்பேரில் ஐஜி சங்கர் மேற்பார்வையில் தேனி சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உதித் சூர்யா தந்தையுடன் கைது
முதல்கட்ட விசாரணையில் மாணவர் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றது உறுதி செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் தேர்வு பயிற்சி மையம்
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அந்த பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விவரம்
தமிழகத்தில் இருந்து விண்ணப்பத்து இருந்தவர்களின் ஒரே பெயர் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்ச்சி மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி,ஏ) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications