இன்று நீட் தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள் விதித்த NTA! ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துறாங்களாமே!
சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை இன்று நடத்த உள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்துள்ளனர்.
நீட் தேர்வு: நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வை எழுதுகின்றனர்.
கடும் கட்டுப்பாடுகள்: இந்த நிலையில் நீட் தேர்வு நடைபெறும் போது முறைகேடுகளை தவிர்க்க தேசிய தேர்வு முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் தெரிவித்திருக்கும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர். தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவேண்டும் எனவும் அதற்குப் பிறகு வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் முன்னரே செல்வது நல்லது.
அனுமதியில்லை: மேலும் ஹால் டிக்கெட் அடையாளச் சான்று இல்லாத மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வு எழுதும் பொருட்கள் அடையாள அட்டை ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை எடுத்து தயாராக வைத்துக் கொள்வது நல்லது. மேலும் மாணவர்கள் நகைகள், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் பேனா, ப்ளூடூத், இயர் போன் ,பெல்ட், பர்ஸ், வாட்ச் என எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
கழிவறைக்கு போக முடியாது: எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். தேர்வு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து வருவோர் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். உயரம் அதிகம் உள்ள ஷூக்களை அணிந்து வரக்கூடாது. மேலும் முழுக்கை சட்டை உள்ளிட்டவற்றையும் அணிந்து வரக்கூடாது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்: மேலும் இந்த ஆண்டு பயோமெட்ரிக் ஆதென்டிஃபிகேஷன் முறை மூலம் மாணவர்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட இருக்கிறது மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications