இன்று நீட் தேர்வு.. மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? கடும் சோதனைக்கு வாய்ப்பு
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1.50 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தான் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2023ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றுக்கு இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாவார்கள். இன்றைய நீட் தேர்வு என்பது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. www.nta.ac.in இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் தான் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளனர்.
அதன்படி மாணவ-மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடிகள், தாயத்து, பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதியில்லை. முழுக்கை உடைகள் அணிய அனுமதியில்லை. மேலும் மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயரம் குறைந்த ஹீல்ஸ் செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். ஷூ, அதிக உயரம் கொண்ட காலணிக்கு அணிந்து செல்ல அனுமதியில்லை. செல்போன் மற்றும் அனைத்து வகையிலான எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் இன்றும் மாணவ-மாணவிகள் கடும் சோதனைகளுக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி, [email protected] இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். அதோடு கூடுதல் விபரங்கள் ஏதேனும் பெற விரும்பினால் Click Here செய்தி அறிந்து கொள்ளலாம்.
-
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications