Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் மையம்! நம்பகத்தன்மை போச்சு.. நீட் பிஜி தேர்வை ரத்து பண்னுங்க! அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படுவது போலவே முது நிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை நீட் தேர்வு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும். நீட்டில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோல நீட் பிஜி தேர்வு மூலமாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும்.

neet pg exam Anbumani Ramadoss nta

அந்த வகையில் நீட் பிஜி தேர்வு கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஹால் டிக்கெட்டும் வெளியாகி இருந்தது. ஆனால் நீட் இளநிலை தேர்வில் நடந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்வில் தொடர் சர்ச்சைகள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என அடுத்தடுத்து புகார்கள் கிளம்பிய நிலையில், முதுகலை படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் பிஜி தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ரத்து அறிவிப்பு வெளியானதால் மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட நீர் பிஜி தேர்வு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை தேர்வு மையம் அமைத்ததில் பலருக்கும் 400 கிமீ தூரம் வரை மையங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள நீட் பிஜி தேர்வில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மீதான நம்பகத்தன்மையே போய்விட்டது என்றும் நீட் பிஜி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு - காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது

முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்தது. அப்போதும் தமக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி அங்கு தேர்வு எழுதச் சென்ற பின்னர், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் வெறுங்கையுடன் திரும்பிய தமக்கு பெரும் செலவு ஏற்பட்டதாகவும் அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் 4 மையங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் உறுதியளித்திருந்தது. ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு மீண்டும் காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய தேர்வு மையம் அறிவித்தது. ஆனால், தருமபுரி மாணவி உள்ளிட்ட பலருக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்படவே இல்லை.

பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது. இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+