நீட் தேர்வு ரத்து.. இந்தியாவே கொந்தளிக்கும் போது தமிழக முதல்வர் மௌனம் காப்பது ஏன்? கைவிட்டுட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) இந்த அறிவிப்பு, இந்தியா முழுவதும் உள்ள சுமார் 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய கல்விப் பேரழிவு நடந்தும், தமிழக முதல்வர் விஜய் இது குறித்து இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

பின்னணி

ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது சிபிஐ விசாரணையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே 12 அன்று மத்திய அரசு தேர்வை ரத்து செய்தது. "மீண்டும் ஒருமுறை நீட் தோல்வி அடைந்துவிட்டது" என சமூக வலைதளங்களில் மாணவர்கள் தங்கள் குமுறல்களை கொட்டி வருகின்றனர். குறிப்பாக, நீட் தேர்விற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழகத்தில், இந்த ரத்து அறிவிப்பு தற்போதைய புதிய அரசுக்கு ஒரு தார்மீக சவாலாக மாறியுள்ளது.

NEET UG 2026 Cancelled Why is Tamil Nadu CM Vijay Silent Amid National Outrage

எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் விமர்சனம்

தேர்வு ரத்து செய்யப்பட்ட நிமிடத்திலிருந்தே, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி வருகின்றனர். "நாங்கள் பலமுறை எச்சரித்தபடி நீட் என்பது ஒரு மிகப்பெரிய பகல் கொள்ளை; மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் இந்தத் தேர்வு முறையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும்" என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் இவ்வளவு தீவிரமாக களமாடும் வேளையில், தமிழக முதல்வர் விஜய் இது குறித்து ஒரு சிறு அறிக்கையோ அல்லது சமூக வலைதளப் பதிவோ கூட வெளியிடாமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. "மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இந்த விவகாரத்தில், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அமைதி காப்பது ஏன்?" என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் எங்களை கைவிட்டுவிட்டார் என்று மக்கள் கோபம் அடைந்து உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய மௌனமும்:

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்விற்கு மாற்றான ஒரு சிறந்த மருத்துவ சேர்க்கை முறை குறித்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. "நீட் இல்லாத தமிழ்நாடு" என்ற கோஷத்தை முன்வைத்து தவெகவினர் கருத்துக்களை வைத்தனர். இந்த நிலையில், இப்போது லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் டெல்லியில் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இக்கட்டான தருணத்தில் முதல்வர் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோட்டை வட்டாரம் சொல்வது என்ன?

முதல்வர் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது குறித்து அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "அவசரப்பட்டு உணர்ச்சிகரமான அறிக்கைகளை விடுவதை விட, இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு என்ன மாதிரியான அழுத்தத்தை கொடுக்க முடியும் என்பது குறித்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முறையான ஆதாரங்கள் மற்றும் தீர்வுகளுடன் அவர் களமிறங்குவார்" என்று கூறப்படுகிறது.

ஆயினும், கால தாமதம் என்பது மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் காரணியாக மாறக்கூடும். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா முதலமைச்சர்கள் ஏற்கனவே தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், நீட் எதிர்ப்பு போராட்டத்தின் மையப்புள்ளியாக விளங்கும் தமிழகத்தின் முதல்வர் இன்னும் மௌனம் சாதிப்பது அரசியல் ரீதியாக அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

மாணவர்களின் நிலைப்பாடு:

"நாங்கள் அடுத்த தேர்வுக்கு எப்போது தயாராக வேண்டும் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதுபோல நடந்தால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை?" என நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் எதிர்பார்ப்பது வெறும் 'மறுதேர்வு' மட்டுமல்ல; முறைகேடுகள் இல்லாத ஒரு நிரந்தர தீர்வைத்தான்.

நீட் விவகாரம் என்பது வெறும் கல்வி சார்ந்தது மட்டுமல்ல, அது தமிழகத்தின் மாநில உரிமையோடும், லட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கனவோடும் பின்னிப் பிணைந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக முதல்வர் விஜய், தனது 'மௌனத்தை' கலைத்து மாணவர்களின் பக்கம் நின்று உறுதியான குரலை எழுப்புவாரா அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ற பெயரில் காலத்தை கடத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+