மார்க்க பந்து, முதல் சந்து.. மறக்க முடியுமா கிரேசி மோகனை!
Recommended Video
சென்னை: புகழ்பெற்ற திரைப்பட வசன கர்தாவும், நடிகருமான கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.
கிரேசி மோகன் தனது சிரிப்பூட்டும் பஞ்ச் வசனங்களால் பல கோடி ரசிகர்களை ஈட்டியவர். வார்த்தைகளை சிலேடையாக பயன்படுத்தி பல பொருட்களை கொண்டு வந்துவிடுவார். இதனாலேயே, இவரது வசனங்களை எளிதாக இனம் கண்டுவிட முடியும்.
அடடே.. கண்டிப்பாக இது கிரேசி மோகன் டயலாக்தாம்ப்பா என கேட்டதுமே சொல்லும் அளவுக்கான தனித்துவம் இவரது வசனங்களில் இருக்கும். இந்த நிலையில்தான், கிரேசி மோகன், மறைவுக்கு தமிழ் சமூக வலைத்தளவாசிகள் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகிறார்கள்.
|
பஞ்ச தந்திரம்
பஞ்சதந்திரம் திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிகளை நினைவு கூர்ந்து இந்த நெட்டிசன் இவ்வாறு கிரேசி மோகனை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இப்படத்தின் காமெடி காட்சிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
|
இரு தசாப்தங்கள்
80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன் என குறிப்பிட்டு, கிரேசி மோகன் ஆன்மா அமைதியடைய வேண்டுவதாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
இரு பெரும் கலைஞர்கள்
கிரிஷ் கர்னாட் மற்றும் கிரேசி மோகன் ஆகிய இரு பெரும் திரைப்பட வித்தகர்கள் ஒரே நாளில் மரணமடைந்த நிலையில், அதை ஒரே ஸ்க்ரீன் ஷாட்டில் சிம்பிளாக சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
மார்க்கபந்து, முதல் சந்து
வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சியை ட்வீட் செய்து, கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
நம்ம ஊர்ல கீப் லெப்ட்தானே
வார்த்தைகளில் விளையாடுபவர் கிரேசி மோகன். அவரது வசனத்தில் இடம் பெற்ற இந்த திரைப்பட காட்சியில், கீப் என்பதால்தான் அந்த பெண், இடதுபக்கம் இருக்கிறார் என்று வார்த்தைகளை போட்டு விளையாடியிருப்பார் கிரேசி மோகன்.












Click it and Unblock the Notifications