சென்னை விஜயவாடா வந்தே பாரத் ரயிலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.. ஆச்சர்ய காரணம்
சென்னை: சென்னை விஜயவாடா இடையே இயக்கப்பட வரும் 7ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் வேகம் கிண்டலுக்குள்ளாக்கப்படுகிறது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5.45 நிமிடத்திலும், கிராண்ட் ட்ரன்க் விரைவு ரயில் 6 மணி நேரத்தில் விஜயவாடாவை கடப்பதால் வந்தே பாரத்தை கிண்டல் செய்கிறார்கள்.
வந்தே பாரத் ரயிலால் 180 கிமீ வேகம் வரை செல்ல முடியும். தற்போதைய நிலையில் வந்தே பாரத் ரயிலை 130 கிமீ வேகத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் 130 கிமீ வேகத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரயில் தண்டாவாளங்கள் அந்த அளவிற்கு பலமாக இல்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தியாவில் 180 கிமீ வேகத்தில் செல்லும் அளவிற்கு தண்டவாளம் மற்றும் ரயில் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் செலவு ஆகும். எனவே இருக்கும் கட்டமைப்பில் 130 கிமீ வேகம் வரையில் தான் போக வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்கள் 100 முதல் 110 கிமீ வேகம் வரை ரயில்கள் செல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே மும்பை, கொல்கத்தா, டெல்லி,ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் 130 கிமீ வேகம் வரை செல்கின்றது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் 130 கிமீ வேகம் வரை செல்கின்றன. அதிக இடங்களில் நிற்காமல் செல்கின்றன. அதனால் அதன் பயண நேரம் மற்ற ரயில்களை விட குறைவாக உள்ளது. தமிழ்நாட்டிற்குள் தற்போது கோவை சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மைசூருக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். 8-ந்தேதி முதல் பயணிகள் ரயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அடையும். இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர் வழியாக விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேணிகுண்டாவில் ரயில் நின்றால் திருப்பதிக்கு எளிதாக பயணிகள் செல்ல முடியும். விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கும், சென்னையில் இருந்து திருப்பதி செல்வோருக்கும் இந்த வந்தே பாரத் வசதியாக இருக்கும். ஆனால் இதுவரை ரேணிகுண்டாவில் ரயில் நிற்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை
இந்நிலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5.45 நிமிடத்திலும், கிராண்ட் ட்ரன்க் விரைவு ரயில் 6 மணி நேரத்தில் விஜயவாடாவை கடப்பதால், 6.30 மணி நேரத்தில் செல்ல போகும் சென்னை விஜயவாடா வந்தே பாரத் ரயிலை நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications