Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய தலைமை செயலக முறைகேடு: அரசாணை ரத்து செய்ததை எதிர்த்த அப்பீல் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உத்தரவை ரத்து செய்தார்.

New Cheif Secretariat scandal:Chennai HC adjourned the judgement about anti corruption investigation

இதை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன், இணைப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை.

முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி, அது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர, புலன் விசாரணையை அரசு கைவிட முடியாது. மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றாலும், இணைப்பு மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளன. வழக்கை வாபஸ் பெறுவது அரசின் முடிவு எனக் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெயவர்த்தன் இணைப்பு மனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+