கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 2,83,88,100 பேர் மீண்டனர் - 3,79,573 பேர் மரணம்
நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத் தொடங்கிய நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 72 நாட்களில் மிகக்குறைந்த பாதிப்பு ஆகும். மொத்த பாதிப்பு 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து, தற்போது 4.17 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு 3.22 சதவீதமாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதமானது 9 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.28 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை விட குறைவாகவே உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,19,72,014 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications