உதயநிதி விவகாரத்தில் கைது.. ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது புதிய வழக்கு! பாய்ந்தது பெண் வன்கொடுமை சட்டம்
சென்னை: பெண் வழக்கறிஞரை வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டு கைதாகி உள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் கோவில் விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பேசி வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார்.

அதோடு திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் ஜீயர்கள் பற்றியும் அவர் கூறும் தகவல்கள் விவாதமாகும். இதனால் அடிக்கடி ரங்கராஜன் நரசிம்மன் பெயர் சர்ச்சைகளிலும் அடிபடும்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு அவர் புதிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும், 3 ஜீயர்களையும் தொடர்புப்படுத்தி அவர் பேசும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய தகவல் தான் சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரின் போில் கடந்த 15ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர்.ஸ்ரீரங்கம் சென்று வீட்டில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை போலீசார் கைது செய்து வாகனத்தில் சென்னை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரங்கராஜன் நரசிம்மன் இதற்கு முன்பு பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறான கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரங்கராஜன் நரசிம்மன் மீதுபெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதியை, ஜீயர்களுடன் தொடர்புப்படுத்தி பேசிய வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மனுக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ரங்கராஜன் நரசிம்மனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நேற்று போலீசார் தள்ளுபடி செய்தனர்.
இதனால் விரைவில் ரங்கராஜன் நரசிம்மன் ஜாமீனில் வெளியே வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தற்போது புதிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ரங்கராஜன் நரசிம்மனுக்கு சிக்கல் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications