வருமான வரி புதிய ரூல்ஸ்.. சொத்து வாங்குவோருக்கு குட்நியூஸ்.. பான் எண் எதற்கெல்லாம் இனி கட்டாயம்
சென்னை: புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. எனவே வரைவு வருமானவரி விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வாங்க பான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல்ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட வங்கி பரிமாற்றத்துக்கு 'பான்' எண் குறிப்பிட தேவையில்லை. எனினும் நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி நிதியாண்டு தொடங்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதை தற்காலத்துக்கு ஏற்ப எளிமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு வருமானவரி விதிமுறைகளை பொதுமக்கள் கருத்துக்கேட்புக்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பொதுமக்கள் கருத்துகளை பரிசீலித்த பிறகு மார்ச் மாத முதல் வாரத்தில் இறுதியான வருமான வரி விதிமுறைகளை வெளியிடப்பட உள்ளது.
புதிய வருமான வரி சட்டம்
அதன்பிறகு இந்த புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதற்கான வருமான வரி வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. இதில் வருமான வரி சட்டத்தில் தற்போதுள்ள 511 விதிகள் 333 ஆகவும், 399 படிவங்கள் 190 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசித்த பிறகு மார்ச் முதல் வாரத்திற்குள் புதிய வருமான வரி விதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விதிமுறைகள்
அதில், வருமான வரி விதி 2026ன் முக்கிய அம்சங்கள் :- தற்போது, ஒரே நாளில் வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக செலுத்துவதற்கோ, எடுப்பதற்கோ 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக உள்ளது. வரைவு விதிமுறைகளில் அந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
10 லட்சம் பணப்பரிமாற்றம்
அதன்படி, ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பரிமாற்றம் செய்தால், 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட தொகை பரிமாற்றத்துக்கு 'பான்' எண் இனி குறிப்பிட தேவையில்லை.
கார் வாங்க பான் கட்டாயம்
கார், இருசக்கர வாகனம் தற்போது, எந்த தொகைக்கு கார் வாங்கினாலும் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்க குறிப்பிட தேவையில்லை. வரைவு விதிமுறைகளின்படி, ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புக்கு காரோ அல்லது இருசக்கர வாகனங்களோ வாங்கினால் 'பான்' எண் குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.
அசையா சொத்து வாங்குவோருக்கு குட்நியூஸ்
ஓட்டல் பில்தொகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், 'பான்' எண் குறிப்பிட வேண்டியதாக முன்பு இருந்தது. அந்த தொகை தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அசையா சொத்துகள் வாங்க, விற்க, பரிசளிக்க 'பான்' எண் குறிப்பிடுவதற்கான தொகை ரூ.10 லட்சத்தில் இருந்தது.இனி அசையா சொத்துகள் அசையா சொத்துகள் வாங்க, விற்க, பான் என் குறிப்பிடுவதற்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காப்பீடுக்கு பான் எண் கட்டாயம்
இப்போது ஓராண்டில் காப்பீட்டு பிரீமியம் மொத்த தொகை ரூ.50 ஆயிரமாக இருந்தால் மட்டுமே 'பான்' எண் குறிப்பிட வேண்டி இருந்தது. இனிமேல், கணக்கு அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுக்க 'பான்' எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி மின்னணு பணம் செலுத்தும் முறைகளில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் குறித்த தகவல்கள், வருமானவரித்துறைக்கு தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படி
வீட்டு வாடகைப்படி கோருவதற்கான கேட்டகிரி-1 பெருநகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்களை வருமான வரித்துறை சேர்த்துள்ளது. இப்படி பல்வேறு அம்சங்கள் புதிய வருமான வரி சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வரைவு விதிகள் குறித்து மக்களின் கருத்துக்கு பிறகு இறுதியான விதிமுறை அடுத்த மாதம் வெளியாகும். ஏப்ரல் 1 முதல் அப்படியே அவை அமலுக்கு வரும்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications