வடசென்னக்கு நல்ல மழை இருக்கு.. மற்ற நிலவரம் என்ன?... தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video
சென்னை: இந்த முறை வடசென்னையில் பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் வரும் 6-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப நேற்று மாலை முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் இந்த முறை வடசென்னைக்கு அதிக மழை பெய்யக் கூடும். அது போல் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் மழை உண்டு.
தொடர் மழை.. இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தென் சென்னையில் முதலில் உருவான மேகக் கூட்டம் தற்போது வலுவிழந்துள்ளது. எனவே கடலோர மாவட்டங்களுக்கு மழை உண்டு. நாளை மேகக் கூட்டங்கள் ஈரப்பதம் காரணமாக மெதுவாக நகரத் தொடங்கும். எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து மேகக் கூட்டங்கள் காத்து கிடக்கின்றன. எனவே நாளை வரை 3 மாவட்டங்களுக்கும் மழை உண்டு என்று தெரிவித்துள்ளார்.